இடுகைகள்

எடப்பாடி பழனிச்சாமி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இடைத்தேர்தல் தோல்வியின் போது கருணாநிதி எழுதிய கடிதம் ஒரு நினைவூட்டல்

படம்
கருணாநிதி எழுதிய கடிதம்: அமைச்சர்கள் தேர்தல் பணிக் குழுவில் இடம் பெற்றதால், அந்தந்த அமைச்சர்களின் கீழ் பணியாற்றும், அரசு அதிகாரிகளை, ஆளுங்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட வைத்தார்கள். ஏற்காடு தொகுதி வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக அரசின் இலவச உதவிப் பொருள்களான மிக்ஸிகள், கிரைண்டர்கள், மின் விசிறிகள் போன்றவை அந்தத் தொகுதிக்குள் கொண்டு சென்றதை 11/11/2013 தேதிய "தினமலர்" நாளேடே வெளியிட்டிருந்தது. ஏற்காடு தொகுதி தேசிய நெடுஞ்சாலைகளில், வாகனச் சோதனை என்ற பெயரில் பொதுமக்க ளின் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அமைச்சர்கள் செல்லும் கிராமச் சாலைகளில் சோதனையிடவே இல்லை. தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், வேட்பு மனு தாக்கல் செய்ய அதிமுக கொடி கட்டிய காரில் வந்தபோது, அமைச்சருக்குப் பாதுகாப்பாக காவல் துறையினர் தேர்தல் விதிமுறைகளை மீறி, தமிழ்நாடு அரசு ஜீப் வாகனத்தைப் பயன்படுத்தினர். அதிமுக வேட்பாளர், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது, நாற்பதுக்கும் மேற்பட்ட அதிமுக கொடி கட்டிய கார்கள் தேர்தல் விதி முறைகளை மீறி வந்தன. 13/11/2013 அன்று பகல் 12 மணியளவில் அனைத்து அமைச்ச...

என்ன தான் செய்து கொண்டு இருக்கிறார் ஸ்டாலின்???

படம்
என்ன தான் செய்து கொண்டு இருக்கிறார் ஸ்டாலின்??? ஸ்டாலின் பதவி ஏற்று இன்றோடு இருபது நாட்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. ஆனால் இவரின் செயல்கள்யாவும் முன்னரே ஒரு குழுவால் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க வடிவமைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நிகழ்வை பத்திரிக்கையாளர்கள் தன் கட்சி நிர்வாகிகள் உதவியுடன் நடத்தும் வேலையை மட்டுமே அதிகம் செய்து வருகிறார். ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எதையுமே இதுவரை செய்ய வில்லை என்பதே உண்மை. இது எதிரி கட்சியாக இருக்கும் போது கைகொடுக்கும் ஆனால் இதையே நீங்கள் செய்து வந்தால் தமிழ் மக்கள் தங்கள் வேலையை காட்ட தொடங்குவார்கள் என்பது வரும் தேர்தல்கள் உங்களுக்கு உணர்த்தும். இதுவரை இவர் என்ன செய்து விட்டார் என்று ஆகா ஓகோ என்று ஊடகங்கள் ஊடகவியாளர்கள் சொல்லுகின்றனர் என்று பார்த்தால் ஓர் மிக பெரிய அதிர்ச்சி தான் காத்திருந்தது. ஏன் என்றால் இவர் அடித்த சிக்சர்கள் ( இப்படியே அதிகமாக பத்திரிக்கை நண்பர்கள் அவரின் செயலுக்கு உவமை படுத்தி கூறுகின்றனர்) முன்பே அடித்த சிக்ஸர்கள், நடைமுறையில் இருக்கும் சிக்சர்கள், சாத்தியமில்லாத வெறும் காகித சிக்ஸர்கள், மத்திய அரசை வலியுறுத்தும் சிக்...

நீங்கள் மாறுங்கள் இல்லை மாற்றப் படுவீர்கள்....

படம்
தற்போது இருக்கும் கொரோனா இரண்டாம் அலைக்கு அதிமுக அரசு முதல் அலையிலேயே முற்று புள்ளி வைக்காததே காரணம் என்கிறார் தற்போதைய கையாலாகாத முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள்.  அரசு கிராம சபை கூட்டம் வேண்டாம் என்ற போது. முடியாது நாங்கள் கூட்டியே தீருவோம் என்று அரசியல் செய்து விட்டு இன்று பழியை தூக்கி முந்தைய அரசின் மீது போடுவதா?. அதிமுக அரசு அனுமதி கொடுக்காத திமுக மாநாட்டை காபந்து அரசு ஆனவுடன் வேக வேகமாக கூட்டி பல லட்சம் தமிழ் மக்களை ஒன்று கூட்டி (காசுக்கு கூட்டம் கூட்டுவது தான் தமிழ்நாட்டின் வழக்கம், அது யாராக இருந்தாலும் என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய விடயம்) கொரோனா பரவலை அதிகரித்த பெருமை திரு. அப்போதைய எதிரி கட்சி தலைவரை தான் சாரும்.  ஏன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்தல் பிரசாரத்தில் கூட்டம் கூட்ட வில்லையா என கேட்கும் சில தற்குறிகளுக்கு ஒரு விளக்கம். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொகுதி வாரியாக பிரச்சாரம் செய்தார். அந்த தொகுதி மக்கள் மட்டுமே ஒன்று கூடினர். ஆனால் ஸ்டாலின் ஒரே இடத்தில் 10 தொகுதி மக்களை ஒரே இடத்தில் கூட்டி பிரச்சாரம் செய்தார். மேலும் திருச்சியில் நடந்த அந்த மாநாட்டில் தமிழ் ...

என்ன செய்ய வேண்டும் TTV தினகரன்? அவரால் இனி யாருக்காவது லாபம் உண்டா? (பகுதி 2)

படம்
பகுதி 1 படிக்க:  http://admk4ever.blogspot.com/2021/05/ttv.html TTV தினகரன் திமுகவுடன் கள்ள உறவு வைத்து கொண்டு 10.5% வன்னியர் இட ஒதுக்கீடுக்கு எதிராக தென் மாவட்டங்களில் இவர் பிரச்சாரம் செய்த காரணங்களால் அதிமுக பெரும்பான்மை இடங்களில் தோல்வி அடைந்தது. இது இவர் இவரை சார்ந்திருக்கும் அதிமுகவை மீட்டு விடுவார் என்று நம்பி இவர் கூட இருந்தவர்களுக்கு இவர் செய்த பச்சை துரோகம். ஆம், இன்றும் அதிமுக அமைச்சரவையில் 8 அமைச்சர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு கிடைத்து வந்தது, அதற்கு அவர்களின் விசுவாசக்கு தான் என்று கொடுக்கப்பட்ட மரியாதை.  Currently People rejected TTV Dhinakaran & AMMK அது இவ்வாறு அந்த சமூக மக்களுக்கு எதிராக அதிமுகவை சித்தரிப்பதன் மூலம் வரும் காலங்களில் அவர்கள் திமுக பக்கம் சென்றால். அது வேறு ஒரு சமூகத்துக்கு கட்டாயம் அந்த தொகுதி சென்றால் உங்களின் பிடியில் இருந்த தொகுதி அந்த சமூகத்தை விட்டு சென்று. பின் நாட்களில் அவர்களுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போக கூடும். உதாரணம்: சோழிய வெள்ளாளர்கள், முன்பு இவர்கள் தான் 8-10 அமைச்சர்கள் இருந்தனர், தற்போது ஒன்று தான...

எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் எதிர்க்கட்சி தலைவராக முதல் செய்தியாளர் சந்திப்பில்

படம்
அதிமுகவை பொறுத்தவரை மக்கள்நலனே முக்கியமானது, 17 அமைப்பு சாரா தொழிலாளர்கள்& 14 நலவாரியங்களை சேர்ந்த 35 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு,அம்மா ஆட்சியில் வழங்கப்பட்டது போல அத்தியாவசியப்பொருட்கள், உணவுத்தொகுப்பு மற்றும் ருபாய் 2000 நிவாரண உதவியை அரசு உடனே வழங்க வேண்டும். எனது தலைமையிலான அம்மாவின் அரசு வழங்கியதை போன்று ஏழைகள் , மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் , கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் சமூக கூடங்கள் அமைத்து உணவு வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. தமிழக அரசு ஆக்சிஜன் இருப்பை அதிகப்படுத்த வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்தால் மட்டுமே கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்க முடியும். தமிழக அரசு தேவையான ஆக்சிஜனை மத்திய அரசிடம் கேட்டுப்பெற வேண்டும் எனது தலைமையிலான அம்மாவின் அரசு எடுத்த போர்க்கால நடவடிக்கைகளை தொடர்ச்சியாக தற்போதைய அரசு எடுத்தால் மட்டுமே சமூக பரவலை கட்டுப்படுத்த முடியும். இந்திய அளவில் நோய் தொற்றில் தமிழகம் முதலிடம், உயர்பலிகள் அதிகமாவது மிகவும் வேதனையளிக்கின்றது.  கொரோனா தினசரி பாதிப்பு 35,000 ஆக அதிகரித்துள்ளது ...

என்ன செய்ய வேண்டும் TTV தினகரன்? அவரால் இனி யாருக்காவது லாபம் உண்டா? (பகுதி 1)

படம்
TTV தினகரனை மிக பெரிய ஆளுமை என்று உசுப்பேத்தி வளர்த்தெடுத்த பெருமை முங்களப் பணியாளர்களை தான் சாரும். அதுவும் குறிப்பாக தராசு சியாம், லக்ஷ்மி, சபீர், லட்சுமணன் போன்ற தன்னை நடுநிலை என்று சொல்லி கொள்ளும் ஒரு சிலரின் சுய லாபத்துக்காக ஆசை வார்த்தை காட்டி திமுகவுடன் வாங்கி கொண்டோ வாங்காமலோ அனைத்து தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் பேசி அவரை 4% வாக்குகளும் குறைவாக வாங்க வைத்து இன்று அவரின் அரசியல் எதிர் காலம் வைகோவை விட கேவலமாக கொண்டு சென்ற பெருமை இவர்களை தான் சாரும். இவரோடு இருப்பவர்கள் கூடிய விரைவில் தாய் கழகமோ அல்லது திமுகவுக்கோ செல்ல தான் போகின்றனர் என்பது மட்டும் 100% நடக்கக் கூடியதே. TTV Dhinakaran spoiler of politics, not shrude politician தொடரும்...

மூடிக்கிட்டு வேலைப்பாருங்க... உ.பி.க்களே...!

படம்
கருணாநிதிக்கு கூவத்தில் கூட இடம் தர மறுத்த எடப்பாடிக்கு, வீட்டையே ஒதுக்கியுள்ளது திமுக - உபி-க்கள்  பிதற்றல்... எதிர்கட்சி தலைவருக்கு கேபினட் அந்தஸ்த்து உண்டு. அரசு வீடும் உண்டு. இது நாள் வரை, எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர்கள் அம்மாவும் கருணாநிதியும் தான். இருவருமே சென்னையைச் சார்ந்தவர்கள் என்பதால், எதிர்க்கட்சி தலைவருக்கு பொதுவா ஒதுக்கப்படும் அரசு வீடு ஒதுக்கப்பட அவசியமில்லாமல் போனது.  ஆனால் இப்பொழுது எதிர்க்கட்சி தலைவர் சென்னையைச் சாராதவர் என்பதால், பொதுவாக ஒதுக்கப்படும் வீடு அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்ளோ தான். மற்றபடி இதுல, கருணை மழை பொழிந்த திமுக, ஆறடி ஒதுக்காத எடப்பாடிக்கு வீட்டையே ஒதுக்கிய என, அது இதுன்னு உருட்ட இதில் ஒன்றுமேயில்லை.  கொஞ்சமேனும் அரசு நிர்வாகம் பற்றி புரிதலுடன் இருங்கள்.  ஆறு மாதத்திற்கு ஒருமுறை சட்டசபை பதிவேட்டில் கையெழுத்து போடவில்லை என்றால் MLA பதவி பறிபோகும் என்ற விதியை, என் அப்பா கருணாநிதி க்கு மட்டும் தளர்த்தி விலக்கு கொடுத்து, என் அப்பா இறக்கும் போது MLA வாகவாச்சும் இருக்க அனுமதிக்க வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். அன்றைய அண்ணா திமுக ம...

மனதை தொட்டு உண்மையை சொல்லுங்கள் நம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்க தகுதி உடையவர் யார் என்று ?

படம்
மனதை தொட்டு உண்மையை சொல்லுங்கள் நம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்க தகுதி உடையவர் யார் என்று ? மண்ணில் நாற்று நட்டியவரா ? மண்டையில் மயிர் நட்டியவரா ? தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக வைத்துள்ளவரா ? அராஜக பூங்காவாக மாற்ற நினைப்பவரா ? (மக்களிடம் தவறான கருத்துகளை கூறி போராட்டக்களமாக மாற்றுதல் ) களத்தில் நின்று வென்றவரா? கணினி முன் அமர்ந்த்தவரா?? சுயதொழில் செய்பவரா ? ஊழலையே தொழிலாக கொண்டவரா ? விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அனைவரையும் மதிக்கும் பண்பு கொண்டவரா? பணக்கார குடும்பத்தில் பிறந்து ரவுடியாக வளர்ந்து தத்தியாக வளர்ந்த்தவரா?? ஏழைகளை காப்பவரா ? ஏழையை கண்டால் விரட்டுபவரா ? காவேரி மேலாண்மை ஆணையம் அமைத்து தீர்வு கண்டவரா? காவேரி பிரச்சனையை வைத்து அரசியல் ஆதாயம் மட்டும் தேடியவரா ? எப்போதும் மக்களோடு மக்களாக இணைந்து எளிமையாக இருப்பவரா? சிகப்பு கம்பளம் விரித்து, கான்கிரீட் அமைத்து, செட் போட்டு மக்களை 10 அடி தூரத்தில் இருந்து சந்திக்கும் ஆடம்பரமாக இருப்பவரா??? மக்களுக்காக உழைப்பவரா ? ...

அம்மா நினைவிடம் திறப்பு விழா

படம்
பினிக்ஸ் பறவையை போல காட்சியளிக்கும் புரட்சித்தலைவி நினைவிடம் ஜனவரி 27 காலை 11 மணிக்கு திறப்பு! சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு: ஜெயலலிதா நினைவிடம் ஜனவரி 27 இல் திறக்கப்படுவதையொட்டி, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் அதிமுகவினர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சென்னை மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு வாகனங்கள் செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுளள்ளது.   மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பினிக்ஸ் பறவையை போல காட்சியளிக்கும் நினைவிடத்தை, ஜனவரி 27 காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க இருக்கிறார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 5 ஆயிரத்தற்கும் மேற்பட்ட வாகனங்களில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒஎம்ஆர், இசிஆர் சாலை வழியாக வரும் அதிமுகவினரின் வாகனங்கள் கலங்கரை விளக்கம் வரை அனுமதிக்கப்பட்டு, அதன் பிறகு வலதுபக்கம் திரும்பி சீனிவாசபுரம...

இதுவரை எங்கயா இருந்தீங்க நீங்க????

படம்
இதுவரை எங்கயா இருந்தீங்க நீங்க???? தலைவன் என்பவன் எப்போதும் நியமிக்கப்படும் நபர் இல்லை, தலைவன் என்பவன் உறுவாகுவான் என்று உணர்த்திய முதல்வரே எங்கயா இருந்தீங்க இதுவரை. புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "தலைவருடன் ஒரு நாள்" என்ற நிகழ்ச்சியில் நெறியாளர் திரு. கார்த்திகை செல்வன் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய விதம் இதுவரை கண்டிராத நேர்காணல் ஏனெனில் அவ்வளவு தெளிவு. இந்த நேர்காணல் வைத்து அவர்கள் எந்த ஃபிளாஷ் செய்தியும் போட முடியாதபடி இருந்தது. இதை பார்த்த எனக்கு எங்கயா இருந்தீங்க இதுவரை என கேட்க தோன்றியது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு யார் என்றே தெரியாது என்று கனிமொழி கூறினார். ஆம் அவர் யார் என்று தெரியாது என்பது உண்மையே. ஆனால் இன்று உன் அண்ணன் இவரை பார்த்து தான் பயப்படுகிறார். இவரை பார்த்து நீங்கள் கேட்க வேண்டியது இதுவரை எங்கயா இருந்தீங்க என்றே. இவர் கோவையில் காலை 8:30 (ஜனவரி 23) மணிக்கு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார், இவர் இதை முடித்து தூங்க சென்ற போது மணி இரவு 10:00, மறுநாள் காலையில் (ஜனவரி 24) தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய போது நேரம் அதே 8:30. இடையில் உணவு, தே...

இப்போதே சொல்ல முடியாது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் அடுத்த முதல்வர் என்று???

படம்
இப்போதே சொல்ல முடியாது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் அடுத்த முதல்வர் என்று??? ஆனால் அவர் வருவார் என்ற நம்பிக்கை மட்டும் எனக்குள் இருக்கிறது. அதற்கு ஒரு 10 காரணங்களை சொல்லுகிறேன். 1. அவர் ஒரு 10 நாள் தாங்க மாட்டார், 3 மாதம் மாட்டார் என்று ஸ்டாலின் அவர்கள் நம்பினார். நாம் ஏன் இவரை எதிர்க்க வேண்டும், ஓ பி எஸ்ஸை எதிர்ப்போம் என்று எடப்பாடியாரை சாதாரனமாக எண்ணி விட்டார் போலும். ஆனால் தற்போது நிலைமை தலைக்கீழ்.  2. TTV தினகரன் என்னும் நபர், ஒரு தொகுதியில் நின்று அதிமுக திமுக என்ற மிகப் பெரிய கட்சிகளை எதிர்த்து வெற்றி பெற்றார். ஆனால் அதை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இது RK நகர்க்கான வெற்றி, பொது தேர்தலில் போட்டியிட்டு வெல்ல முடியாது என்று கூறி விட்டு சென்றார். அந்த நிதானம் தான் அரசியலில் அவர் இன்றும் களத்தில் இருக்க வைக்கிறது. 3. 18 MLA க்கள் TTV தினகரன் பக்கம் நின்று இவருக்கு குடைச்சல் கொடுக்க இவர் அவர்களை நீக்கி உத்தவு பிறப்பித்தது மிகப்பெரிய முடிவு. இவரின் தைரியம் வெளிப்பட்ட தருணம் அது. 4. 18 MLA க்கள் இடைத்தேர்தல் வரும் போது அதை சாதுர்யமாக அது தன் களமல்ல என்று பொதுத் தேர்த...

தேர்தல் பிரச்சாரம்: கோவையை குலுங்க வைத்த எடப்பாடியார்

படம்
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப்படும் கோயம்புத்தூர், ஆளும் அதிமுக ஆட்சியில், முன்னெப்போதும் இல்லாத மாபெரும் வளர்ச்சியை கண்டிருப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளிலும், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி,உள்ளிட்ட பல்வேறு சட்டமன்ற தொகுதிகளிலும் முதலமைச்சர் பரப்புரை மேற்கொண்டார். கோயம்புத்தூர் இராஜவீதியில் தனது பரப்புரையைத் தொடங்கிய முதலமைச்சர், ஆளும் அதிமுக அரசால், 10 லட்சம் பேருக்கு ஒரே நேரத்தில் வேலை கிடைத்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். போத்தனூர் பகுதியில், அனைத்து இஸ்லாமிய ஜமாத் நிர்வாகிகளையும் சந்தித்து கலந்துரையாடிய முதலமைச்சருக்கு, ஜமாத்தார் சார்பில், சமூக கல்வி பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது. குல்லா அணிந்து இஸ்லாமியர்களின் ஆதரவை கோரிய முதலமைச்சர், ஹஜ் புனித யாத்திரைக்கான நிதியை மத்திய அரசு ரத்து செய்தபோது, தமிழக ஆளும் அதிமுக அரசு, தொடர்ந்து வழங்கி வருவதாக குறிப்பிட்டார். குனியமுத்தூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர், உள்ளாட்சித்துறையும், அதற்கான அமைச்சர் எஸ்.பி...

இலங்கை கடற்படை தாக்குதலால் 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, ரூ.10 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி

படம்
இலங்கை கடற்படை தாக்குதலால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, ரூ.10 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆணை. இலங்கை கடற்படையின் இச்செயலை வன்மையாக கண்டித்து உத்தரவு.