இடுகைகள்

திமுக லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நீங்கள் மாறுங்கள் இல்லை மாற்றப் படுவீர்கள்....

படம்
தற்போது இருக்கும் கொரோனா இரண்டாம் அலைக்கு அதிமுக அரசு முதல் அலையிலேயே முற்று புள்ளி வைக்காததே காரணம் என்கிறார் தற்போதைய கையாலாகாத முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள்.  அரசு கிராம சபை கூட்டம் வேண்டாம் என்ற போது. முடியாது நாங்கள் கூட்டியே தீருவோம் என்று அரசியல் செய்து விட்டு இன்று பழியை தூக்கி முந்தைய அரசின் மீது போடுவதா?. அதிமுக அரசு அனுமதி கொடுக்காத திமுக மாநாட்டை காபந்து அரசு ஆனவுடன் வேக வேகமாக கூட்டி பல லட்சம் தமிழ் மக்களை ஒன்று கூட்டி (காசுக்கு கூட்டம் கூட்டுவது தான் தமிழ்நாட்டின் வழக்கம், அது யாராக இருந்தாலும் என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய விடயம்) கொரோனா பரவலை அதிகரித்த பெருமை திரு. அப்போதைய எதிரி கட்சி தலைவரை தான் சாரும்.  ஏன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்தல் பிரசாரத்தில் கூட்டம் கூட்ட வில்லையா என கேட்கும் சில தற்குறிகளுக்கு ஒரு விளக்கம். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொகுதி வாரியாக பிரச்சாரம் செய்தார். அந்த தொகுதி மக்கள் மட்டுமே ஒன்று கூடினர். ஆனால் ஸ்டாலின் ஒரே இடத்தில் 10 தொகுதி மக்களை ஒரே இடத்தில் கூட்டி பிரச்சாரம் செய்தார். மேலும் திருச்சியில் நடந்த அந்த மாநாட்டில் தமிழ் ...

தடுப்பூசியில் திமுக செய்த அரசியலின் விளைவு இன்று தமிழகம் தள்ளாடுகிறது. ஏன்???

படம்
மனிதாபிமானம் உள்ளவர்கள் மனசாட்சியுடன் அரசியலை மறந்து இதை படியுங்கள்.. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.. இன்று தமிழகம் சுடுகாடாக மாறி இருக்கிறது என்றால் இதற்கு யார் காரணம்??? நாம் தயாரித்து கொடுத்த கொரோனா தடுப்பூசி 70 நாடுகளுக்கு கொடுக்கப்பட்டு அவர்கள் அதை சரியாக பயன்படுத்தினார்கள்.  ஆனால் தமிழகத்தில் , மோடியே நீ ஏன் தடுப்பூசி போடவில்லை, மக்கள் என்ன பரிசோதனை எலிகளா என்றார் - மருத்துவம் படிக்காமல் மருத்துவராக இருக்கும் திருமாவளவன்! எடப்பாடியும் மோடியும் சேர்ந்து கொரோனா தடுப்பூசியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்றார் - ஸ்டாலின்! மோடி போடாமல் மக்கள் மீது மருந்து வியாபாரம் செய்து தனியார் துறையை வளர்க்க மக்களை பலிகடா ஆக்குகிறார்கள் என்றனர் -கம்யூனிஸ்ட்கள்! எதுக்கு தடுப்பூசி அனுமதிக்கு இவ்ளோ அவசரம்ணு நக்கல் செய்தார் -ராகுல்காந்தி! கொரனா தடுப்பூசியின் மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்தாமல் மக்கள் மீது திணிக்க முயற்ச்சி நடக்கிறது என்றார் -கனிமொழி! உலகமே நிராயுதபாணியாக நின்ற போது, தமக்கும் தயாரித்து உலக முழுவதும் தவித்தவர்களையும் பாதுகாக்க முன் வந்தது என் பாரதம்.  ஆனால் இவர...

திமுக ஒன்றை ஆதரிக்கிறது என்றால் அது கட்டாயம் தேசத்திற்கு எதிரானதாக தான் இருக்கும்...

படம்
திமுக ஒன்றை ஆதரிக்கிறது என்றால் அது கட்டாயம் தேசத்திற்கு எதிரானதாக தான் இருக்கும்... உதாரணம் இல்லாமல் இருந்தால் எப்படி???? இதோ... கச்சத்தீவை நல்லெண்ண அடிப்படையில் இலங்கையிடம் கொடுத்த இந்திரா காந்தி, அப்போது ஆட்சியில் இருந்தது யார் என்று பார்த்தால் வேறு யார் நம்ம கருணாநிதி தான். யாருக்கு நல்லது என்று தற்போது உங்களுக்கு தெரியாமல் இருக்காது... சமூக நீதியை சீர்குலைத்த நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் அதன் அமைச்சரவையில் பங்குபெற்ற திமுகவும் தான் ஆனால் இன்று அதிமுக மீதே தன் சார்பு ஊடகங்களை வைத்து பழி போடும் ஸ்டாலின், பொய்யை மட்டுமே பேசும் திமுக என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம். ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்று மார்தட்டிக் கொள்ளும் நாம். மாடுகளை காட்சிப் படுத்தும் விலங்குகள் பட்டியலில் சேர்த்து, அது காட்டுமிராண்டி தனம் என்று சொல்லியது காங்கிரஸ் - திமுக ஆட்சியில் தான் என்பதும். அதன் ஆட்சி காலத்தில் தான் ஜட்டிகட்டு தடை செய்யப்பட்டது. ஆனால் இப்போது இதை பார்க்க வந்த ராகுல் காந்தி சொன்னது தான் கொடுமை, இதை மாடுகளை கொடுமை படுத்தும் நிகழ்வு இல்லை என பார்த்து தெரிந்து கொண்டதாக சொன்ன...

திமுக சமூக நீதி கட்சியாக காட்டிகொள்வது போல் அப்படி தானா??? பகுதி - 2

படம்
திமுக சமூக நீதி கட்சியாக காட்டிகொள்வது போல் அப்படி தானா??? Click here for பகுதி 1 இன்று தலித் சமுதாய மக்கள் கல்வி கற்று நல்ல நிலையில் இருப்பது நாங்கள் போட்ட பிச்சை என்பான் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆனால் தலைவர்/ திமுக எந்த வித கருத்தையோ அதற்கு பதிலையோ கூட கொடுக்க மாட்டார்கள். கேட்டால் தன்னை சமூக நீதிக்கு வித்திட்டவர் என்று சொல்லிக்கொள்வது. சாதிய அடையாளத்தை கொண்ட பதவியாக விளங்கிய பதவியான தலையாரி பதவியை ஒழித்து கிராம நிர்வாக அலுவலர் ( VAO) பணியை கொண்டு வந்த MGR சொல்லிக் கொண்டால், 69% சதவீத இடதுக்கீடு கொண்டு வந்து சமூக நீதி காத்த மங்கை என்று எதிரிகளே பட்டம் கொடுக்கும் வண்ணம் பாராட்டு பெற்ற ஜெயலலிதா சொல்லிக் கொண்டால், மருத்துவ படிப்பில் நீட் என்ற காங்கிரஸ் மைய அரசு கொண்டு வந்த தேர்வுக்கு முன்பும் பின்பும் அரசு பள்ளி மாணவர்கள் வருடத்திற்கு 25-35 பேர் மட்டுமே தேர்வு ஆன நிலையை மாற்றி 500 பேர் வரை தேர்வு செய்ய 7.5 % மருத்துவ இட ஒதுக்கீடு கொண்டு வந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சொல்லிக் கொண்டால் நியாயம் உண்டு. எந்த அடிப்படையில் நீங்கள் இப்படி சொல்லி கொள்கிறீர்கள்???? சமத்துவபுர...

திமுக சமூக நீதி கட்சியாக காட்டிகொள்வது போல் அப்படி தானா??? பகுதி 1

படம்
திமுக சமூக நீதி கட்சியாக காட்டிகொள்வது போல் அப்படி தானா??? இதோ சில தரவுகள்... * இஸ்லாம் என்ற மதம் இந்த உலகுக்கு தோன்றியது முதலே மக்களை நல்வழி படுத்த பல்வேறு நிலைகளில் முயற்சித்து வருகிறது. இருப்பினும் எல்லா மதங்களையும் போல இதுவும் காலத்திற்கு ஏற்றார் போல் மாறாமல் இருப்பது திமுக, முஸ்லிம் லீக் போன்ற தீய சக்திகளால் தான் என்பது என் கூற்று. திமுக மற்றும் முஸ்லிம் கட்சிகள் இவர்களை ஒரு ஓட்டு எண்ணிக்கையாகவே கருதுகிறது, எப்படி பாஜக ஹிந்து என்று சொல்லி ஏமாற்றி வாக்குகளை வாங்குகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளதோ அதை போலவே. திமுக அவர்களுக்கு கட்சியில் ஒரு சிறு பிரதிநிதி த்துவம் கூட கொடுக்காது, ஆனால் அவர்களை தவறாக வழி நடத்தி அவர்களின் வாக்குகளை வாங்கும். அதிகாரம் என்பதை அவர்களுக்கு கொடுக்காமல் எப்போதும் பார்த்துக் கொள்ளும். கூட்டணி என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு சீட் கொடுத்து அவர்களை வெளியில் வைத்து கொள்ளும், இதற்கு அவர்களும் முட்டாளாக்கப்படுவார்கள். ஆனால் ராஜ்ய சபா MP பதவி, கட்சியில் நல்ல பதவி கொடுத்து முஸ்லிம்கள் முன்னேற்றம் பற்றி சிந்திக்கும் அதிமுக போன்ற கட்சிகளுக்கு எதிரான மனநிலையை வைத்து கொள்ள இவர...

ஜல்லிக்கட்டை பொழுதுபோக்கின் கொடூரமான வடிவம் என்றவர்களை பார்வையிட அனுமதிப்பது தமிழாகளுக்கு செய்யும் துரோகம்

படம்
ஜல்லிக்கட்டு "பொழுதுபோக்கின் கொடூரமான வடிவம்"  என்றவர்கள்  இன்று அதை பார்வையிட வருவது தான்  கொடூரம். ராகுல்காந்தி பொங்கல் அன்று மதுரை வந்து ஜல்லிக்கட்டை பார்வையிட வருவது, அதை இந்த தீய சக்தி தீமுக அனுமதித்தது தமிழர்களுக்கு திமுக செய்யும் மற்றுமொரு துரோகம். ஆம், ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து peta வுடன் கை கோர்த்து தமிழர் பாரம்பரிய விளையாட்டை தடை ஆணை பெற பக்கப்பலமாக இருந்த கட்சிகளில் காங்கிரஸும் உண்டு என்பதற்கு கீழே உள்ள கடிதம் தான் சான்று. தமிழர் நலன், தமிழின அழிப்பு என இருந்த ராகுல் காந்தி குடும்பத்தை தமிழகம் என்றும் ஏற்காது. இவர்கள் தற்போது நீலி கண்ணீர் வடிப்பது தேர்தல் நாடகம் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர்.