ஜெயலலிதா என்பவரின் அரசியல் வாழ்வு:
ஏழு தமிழர்கள் விடுதலைன்னு வந்ததும், வழக்கம் போல ஆரம்பிச்சிட்டானுங்க. ராஜீவ் காந்தியின் படுகொலையின் தாக்கத்தால் தான் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அரசியல் வாழ்வைப்பெற்றார். ஜெயலலிதா என்பவரின் அரசியல் வாழ்வே ராஜீவ் காந்தி கொலையால் தான் நடந்ததுன்னு சில அதிமேதாவிகள் கூவுவது வழக்கம். சரி உண்மை தான் என்ன..?? 1987 டிசம்பர் 24 புரட்சித்தலைவர் மறைந்து விட்டார். அதன் பிறகு ஜெ-ஜா என அதிமுக இரண்டாக பிளவுற்றது. ஜெ அணியில் - 33 MLA க்கள். ஜா அணியில் - 99 MLA க்கள். (சபா உட்பட) அந்த நேரத்தில் திமுகவில் இருந்த 10 MLA க்கள் அரசியல் சாசனத்தை எரித்துவிட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தனர். இந்திரா காங்கிரஸின் 10 சிவாஜி ஆதரவு MLA க்கள் ராஜினாமா செய்ததும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டு, இருந்த 191 MLA க்களை வைத்து பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தும், சபையில் நடந்த கலாட்டவை கருத்தில் கொண்டு ஆட்சி கலைக்கப்பட்டது. 1989 ஜனவரி 21 .சட்டமன்ற பொதுத்தேர்தல். திமுக கூட்டணி 169 இடங்கள். திமுக தனித்தே 150 இடங்கள். கருணாநிதி முதல்வர். அதாவுது இரட்டை இலையில் போட்டியிட முடியாமல்...