அம்மா பேரவை மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை ; வெற்றி மட்டுமே இலக்கு’ ஓ பி எஸ் சூளுரை

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக அம்மா பேரவை மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைப்பெற்றது. இதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான பன்னீர் செல்வம் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளில் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அரசு வெற்றி பெற பாடுபட வேண்டும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், ‘ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதா பிறந்தநாளுக்கு பிள்ளையார் சுழி போடுவது அம்மா பேரவை தான். யாராலும் அசைக்க முடியாத இயக்கமாக அதிமுகவை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவாக்கியுள்ளார். அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருப்பதே பெருமை. அதிமுகவுக்கு 30 ஆண்...