எடப்பாடியார் ஏழைகளின் கைகளில் தவழும் Android Phone

எளியவர்கள் கைகளில் தவழும் ஆண்ட்ராய்டு போனை போன்றவர் முதலமைச்சர் என்று அதிமுக உறுப்பினர் இன்பதுரை சட்டப்பேரவையில் பேசினார். தொழிலாளர் நலன் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய இன்பதுரை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணக்காரர்கள் கையில் தவழும் ஐபோன் போன்றவர் அல்ல, எளியவர்கள் கைகளில் தவழும் ஆண்ட்ராய்டு போனை போன்றவர் என்றார். இந்த ஆட்சி கலைந்து விடும் என்று கூறிவர்களுக்கு மத்தியில், லித்தியம் பேட்டரி போன்று நீடித்து நிலைக்க கூடியவர் முதலமைச்சர் என்று அவர் புகழாரம் சூட்டினார். ஒரு போன் சிறந்த போனாக இருக்க அதன் மதர்போர்டு சிறந்ததாக இருக்க வேண்டும் என்றும், அந்த வகையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மதர் போர்டாக இருந்து அவரை உருவாக்கியதால் சிறந்த ஆட்சியை வழங்கி வருகிறார் என்றும் இன்பதுரை பாராட்டு தெரிவித்தார்.