இடுகைகள்

பொதுவாக காங்கிரஸ் வெல்வது நாட்டிற்கொன்றும் அவ்வளவு நல்ல செய்தியெல்லாம் இல்லை!

படம்
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் யார் கை ஓங்கினாலும், அது அப்படியே MP தேர்தலிலும் எதிரொலிக்கும் எனச் சொல்லிவிட முடியாதென்பதே நம் கருத்து. ஆனால் indicator ஆக எடுத்துக் கொள்ளலாம். அவ்ளோ தான்.  ராஜஸ்தான் பொதுவா பிஜேபி காங்கிரஸ் மாறி மாறித்தான் வருகிறது கடந்த 20-25 வருடங்களாகவே. தற்போதைய காங்கிரஸின் அஷோக் கெலாட் ஆட்சி, மீண்டும் காங்கிரஸே என்கிற நிலைக்குக் கொண்டு செல்வாரா எனத் தெரியவில்லை.  ஆனால் நிறைய நல்ல விசயங்களை செய்திருப்பதுவும், சச்சின் பைலட்டை ராகுல் smooth ஆக handle செய்த விதமெல்லாம் காங்கிரஸுக்கு நல்ல பலம். பிஜேபியும் நல்ல பலத்துடன் சரிக்கு சரியாக மோதியிருக்கிறது. மீண்டும் காங்.ஜெயிக்குமென்றே தோன்றுகிறது. பார்ப்போம்.  மத்தியபிரதேஷம் போனமுறை காங்கிரசே அதிக எண்ணிக்கையில் ஜெயித்தது. சிந்தியாவைத் தூக்கி ஆட்சியைக் கவிழ்த்து அதற்கப்பறம் தேர்தல் என ஜனநாயகப் படுகொலைகளையெல்லாம் சர்வ சாதாரணமாக நிகழ்த்தியது பிஜேபி. இந்த முறையும் கூட கடும் போட்டியே நிலவுகிறது. பிஜேபி ஜெயிக்குமென்றே நானினைக்கிறேன்.  சட்டீஸ்கர் கிட்ட கிட்ட வந்தாலும் காங்கிரஸ் வெல்லும்.  தெலுங்கானாவில், கர்நாடக போலவே

அண்ணாதிமுகவிற்கு நீ தான் மச்சி பிரசாந்த் கிஷோர்😍😍

படம்
அண்ணாதிமுகவிற்கு நீ தான் மச்சி பிரசாந்த் கிஷோர்😍😍 ரத்தத்தின் ரத்தங்களே, உங்கள் Booth-ல் 51% ஓட்டை வாங்கிக் காட்டுங்கள். அவ்ளோ தான் இலக்கு. எளிதான மற்றும் வலிமையான இலக்கு. ஒன்றியம் ஒத்துழைக்கல, மாவட்டம் அதப் பண்ணல இதப் பண்ணல ங்கிற பல்லவி எல்லாம் வேணாம்.  உங்க பூத் voter listல, நம்ம கட்சிகாரங்க எத்தனை பேரு, திமுக காரன் எத்தனை பேரு, மற்றக் கட்சியில் இருப்பவன் யார் யார் என லிஸ்ட் எடுங்க.  மீதி எவ்ளோ பேர் எந்தக் கட்சியிலும் இல்லை என்பதையும், அவர்களிடம் நம் கட்சி மீதான நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் விதமாகவும் என்னென்ன செய்ய முடியுமெனப் பார்த்து யோசித்து அதைச் செய்யுங்கள்.  வெளியூர் ல இருக்கிற, நம்மக் கட்சி காரன் ஓட்டுப் போட வந்துருவானா அல்லது எதும் உதவி தேவைப்படுதான்னுப் பாருங்க. அதை சரி பண்ணுங்க. 18-30 வயசு தம்பி தங்கைகளிடம் மென்மையாக விவாதம் செய்யுங்கள். இதுவரை அதிமுக என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதையும், அடிப்படைக் கொள்கைகளையும், அண்ணாதிமுகவிற்கு அவர்கள் ஏன் வாகளிக்க வேண்டுமென்பதையும் பொறுமையாக எடுத்துரையுங்கள்.  எடப்பாடியார் எதிர்கொண்ட சவால்களையும், அவர் செய்த மக்கள் நலத் திட்டங்களையு

யார் காலில் தான் கருணாநிதி விழவில்லை..?

படம்
சசிகலாவின் காலைப்பிடித்து ஆட்சிக்கு வந்த பழனிசாமி இப்போது மோடி, அமித்ஷாவின் கால்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் அவர் பாதம் தாங்கி பழனிசாமி - பால்டாயில் உதயநிதி எவர் காலைப்பிடித்தும் அவர் இந்நிலைக்கு வரவில்லை.  ஆனால், அவர் காலை, ஆறடி நிலத்துக்குப் பிடித்தது யார், கண்ணீர்ப் பெருக்கெடுத்து அவரின் கையைப் பிடித்து கதறினேன் என கதறியது யாரென் ஊர் உலகத்திற்கு நன்றாகவேத் தெரியும்.  அதுசரி பால்டாயில் உதயநிதி,  1969 அண்ணா மறைந்தவுடன் புரட்சித்தலைவரின் காலைப் பிடித்து முதல்வரான ஒரு கயவனின் கதை தெரியுமா உங்களுக்கு..?  எங்கள் தங்கம் படம் நடித்துத் தாருங்கள் கலைச்செல்வி எனப் புரட்சித்தலைவியின் காலைப் பிடித்த ஒரு பித்தலாட்டப் பேர்வழியின் வரலாறு தெரியுமா உங்களுக்கு..?  சர்க்காரிய அறிக்கையின் படி நடவடிக்கை எடுத்துவிடாதீரென, நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என சாஸ்ட்டாங்கமாய் விழுந்து, இந்திராகாந்தியின் காலைப் பிடித்த, இந்தியாவின் மோசமான ஒரு தீயசக்தியின் திடுக்கிடும் அரசியல் பயணங்கள் குறித்தெதாவுது உங்களுக்குத் தெரியுமா..?  2ஜி வழக்கில் கனிமொழிக்கு பெயில் கிடைக

தமிழ்நாட்டில் யார் யார் எத்தனை நாட்கள் முதல்வராக இருந்துள்ளனர்

படம்
கருணாநிதி 6863 ஜெயலலிதா 5234 எம்.ஜி.ஆர் 3715 காமராஜர் 3457 எடப்பாடி கே பழனிச்சாமி 1539 பக்தவத்சலம் 1249 முக ஸ்டாலின் 889+ PS குமார சாமி ராஜா 804 ராஜாஜி 733 அண்ணா 698 O பன்னீர்செல்வம் 471 VN ஜானகி 23 VR நெடுஞ்செழியன் 21

அதிமுக ஆட்சியில் மகளிருக்கு நிறைவேற்றப்பட்ட மிக முக்கிய சாதனைகள்..!

படம்
சொல்லில் மட்டுமல்லாமல் செயல்களிலும் அத்தியாயம் படைப்பது அதிமுக🌱 அதிமுக ஆட்சியில் மகளிருக்கு நிறைவேற்றப்பட்ட மிக முக்கிய சாதனைகள்; 1.தொட்டில் குழந்தை திட்டம் தந்து மகளிர் குலம் காத்தது அம்மாவின் அரசு! 2.மகளிருக்கு 69% இடஒதுக்கீட்டிற்கு முதன்முறையாக குரல்கொடுத்த கட்சி! 3.உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது 4.பட்டம் அல்லது பட்டய படிப்பு படித்தவர்களுக்கு ₹50,000 நிதியுதவி 5. திருமண நிதியுதவியாக ₹50,000 நிதியுடன், தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் திருமண சீர்வரிசை தொகுப்பு வழங்கியது.! 6.கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவுப்பொருட்கள் தரமான மருத்துவ வசதிகளை வழங்கியதுடன் சமுதாய வளைக்காப்பு விழா நடத்தி நிதியுதவியும் வழங்கியது.! 7.மகப்பேறு காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு குழந்தைகள் நல பரிசுப்பெட்டகம் மற்றும் இணைஊட்டச்சத்து சத்துணவு மாவு வழங்கியது.  8.பெண்களின் பாதுக்காப்பினை உறுதிப்படுத்தும் வகையில் "அம்மா பட்ரோல் திட்டம்" செயல்படுத்தப்பட்டது.! 9.மகளிர் மேலும் உயர்ந்திட "அனைத்து மகளிர் காவல்நிலையம்" உருவாக்கியது.! 10.மகளிர் த

நீட் தேர்வும் உண்மையும் பொய்யும் : நடுநிலையாளர்

படம்
நீட் தேர்வும், உண்மையும், பொய்யும்., 👇 யாருக்கு வேண்டுமானாலும் வாக்களித்து கொள்ளுங்கள்., அது உங்கள் உரிமை., ஆனால் பொய்யான வாக்குறுதி அளிப்பவர்களுக்கு ஒரு போதும் வாக்களிக்காதீர்கள்., நீட் தேர்வை, நீக்கவே முடியாதா என்றால் நிச்சயம் முடியும் தான், மக்களவை & மாநிலங்களவையில் நீட் ரத்து செய்வதற்கான சட்ட வரைவு கொண்டுவந்து அதை பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றி, அதை உச்ச நீதிமன்றம் & குடியரசு தலைவரின் சம்மதத்தோடு நீக்குவதற்க்கானதுதான் தற்போது இருக்கும் ஒரே வழி., தற்போது உள்ள சூழ்நிலையில் இதை செய்ய மத்திய ஆளும் கட்சியான பிஜேபியால் மட்டுமே முடியும்., நீட் வேண்டும் என்ற முடிவில் இருக்கும் பிஜேபி இதை செய்வதற்கான வாய்ப்பு மிக மிக குறைவே., மாநில கட்சியான திமுகவால் இது சாத்தியமா என்பதை மக்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்., ரெண்டாவது.,  நாளை , ஒருவேளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் கட்சி நீட்டை ரத்து செய்துவிடுமா என்றாலும் 100 க்கு 99 சதவிகிதம் வாய்ப்பு கம்மிதான், ஏனென்றால் இந்தியாவில் நீட் தேர்வு அவசியம் என சொல்லி அதை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து அதை சட்டமாக்கியதே கா

நேற்றைய ஓ பன்னீர்செல்வம் என்னும் சுயநலவாதியின் பேட்டி எதை உணர்த்துகிறது?

படம்
நேற்றைய ஓ பன்னீர்செல்வம் அவர்களின் பேட்டி: 1. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் அதிமுகவை வழிநடத்த தகுதியானவர் என்பதை நிரூபித்து இருக்கிறது, 2. திமுக என்னும் தீயசக்தியை, பாஜக என்னும் மதவாதசக்தியை எதிர்க்க கூடிய தலைவர் தமிழ்நாட்டில் அது எடப்பாடியார் மட்டுமே என்பதை தெளிவுபடுத்தியது. 3. திரு. O பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் இருக்கும் கூஜாக்களை ஏன் அதிமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற சந்தேகம் இருந்தவர்களுக்கு விடையாக அவர் திருவாயிலேயே உதிர்ந்து இருக்கிறது, 4. அண்ணா, அம்மா இவர்களின் புகழை கடத்தி செல்ல தகுதியான தலைமையை இயற்கை நமக்கு கொடுத்து இருக்கிறது.