இடுகைகள்

என்ன நடந்தது 25 செப்டம்பர் 2023 அன்று அதிமுக தலைமை அலுவலகம் எம்.ஜி.ஆர் மாளிகையில்...

படம்
தமிழ்நாட்டில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை வைத்து எடப்பாடி தெளிவுப்படுத்திய நிலையில், அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர்கள் நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி ஆகியோரை செப். 23-ம் தேதி டெல்லிக்கு அனுப்பிவைத்தார் எடப்பாடி. அவர்களும் அண்ணாமலை குறித்து கருத்தை பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிடம் தெளிவுப்படுத்தினார்கள். ஆனால், ஜே.பி.நட்டா அதை காதிலேயே வாங்கிகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில்தான் அ.தி.மு.க தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் செப்.25-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுமென்று 24-ம் தேதி காலை அறிவிப்பு வெளியானபோதே, `பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை' என்பதை எடப்பாடி அறிவிக்கப்போகிறாரென்று தகவல் பரவியது. அதன்படி, செப்.25-ம் மதியமே அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூடத்தொடங்கினர். வழக்கத்துக்கு மாறாக கூட்டமும் அலைமோதியது. ஆங்காங்கே அண்ணாமலைக்கு எதிராகவும், பா.ஜ.க-வுக்கு எதிராக கோஷங்களை கேட்ட முடிந்தது. கூட்டத்துக்கு வரும் நிர்வாகிகளின் செல்போன்கள் மு...

திமுகவின் மூலதனமே பொய் தான், பொய் மட்டும் தான்!!!

படம்
திமுக சார்பில் தொலைகாட்சி விவாதங்களில் பேசும் வக்கீல் சரவணன் அண்ணாதுரை என்பவர் போகிற போக்கில், தமிழ்நாட்டில் இருக்கும் 69% இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது கருணாநிதி தான் என்று பதிவிட்டிருக்கிறார். அண்ணாதிமுகவின் அடிமட்ட தொண்டனான நான், இதை பார்த்ததும் அதிர்ச்சியடையவில்லை.  பித்தலாட்டம் செய்வதற்கென்றே பிறப்பெடுத்த, பித்தலாட்டத்தின் பிதாமகன், திரு கருணாநிதி அவர்களின் வழியில் வந்தவர்கள், பித்தலாட்டம் செய்யாமலிருந்தால் தான், அதிர்ச்சியடைய வேண்டும் என்ற அடிப்படைத் தத்துவத்தை அறிந்தவன் நான். சரி, விஷயத்திற்கு வருவோம்.  69% இட ஒதுக்கீடு கொண்டுவந்தது யார்..? அதன் வரலாறு தான் என்ன..? தரவுகளை நான் தருகிறேன். பிறகு நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள். 1950 அரசியலமைப்புச் சட்டம் 41% இட ஒதுக்கீட்டைத் தந்தது.  பிற்படுத்தப்பட்டோருக்கு OBC - 25% பட்டியல் இனத்தவருக்கு SC - 16% புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் பிரச்சாரம் செய்யப்பட்டு உருவான அன்றைய திமுக அரசால், 1971-76 திமுக ஆட்சிக் காலத்தில் 8% உயர்த்தப்பட்டு, 41% என்பது 49% ஆக மாறுகிறது இட ஒதுக்கீடு.  அதாவுது,  OBC -...

உண்மையான சனாதான தர்மத்தின் இடைசொருகளை ஆக்கப்பூர்வமாக எதிர்க்கும் கட்சி அதிமுக மட்டுமே!!!!

படம்
🌟 சமூகநீதி / இடஒதுக்கீடு 1) 50% இடஒதுக்கீட்டை தந்தது அதிமுக...! 2) 69% இடஒதுக்கீட்டோடு சட்டப்பாதுகாப்பும் தந்தது அதிமுக..! 3) மணியக்காரர் முறை ஒழிக்கப்பட்டு,VAO பதவி உருவாக்கம்... 4) உள்ளாட்சியில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு... 5) தெருக்களில் இருந்த சாதி பெயர் நீக்க நடவடிக்கை... 6) அரசுபள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு...  🌟 மகளிர் நல மேம்பாடு 1) குழந்தைகளுக்கு தாயின் முதலெழுத்தையே Initial ஆக போட உரிமை வழங்கியது. 2).மகளிர் காவல் நிலையத்தை அமைத்து கொடுத்தது. 3) பெண்கள் சுயதொழில் தொடங்க வழிவகை செய்தது. 4) மகப்பேறு விடுப்பை 9 மாதமாக அதிகரித்தது. 5) பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டத்தை தொடங்கியது... 6) பெண்களுக்கு தாலிக்கு தங்கம் கொடுத்தது...! 7) தாய்மார்களுக்கு பாலூட்டும் அறையை ஏற்படுத்திக் கொடுத்தது... 8) ஆசியாவிலேயே முதல் பெண் ஓட்டுநரை அறிமுகப்படுத்தியது...! 9) +2 படித்திருந்தால் பெண்களுக்கு 25,000 ரூ...உயர்கல்வி படித்தால் பெண்களுக்கு 50,000 ரூ என்று திருமண உதவித்தொகை வழங்கியது அதிமுக அரசு...! 10) பெண் சிசுக்களை காக்க த...

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் அரசியல் வரலாறு

படம்
எம்.ஜி.ஆரைப் பற்றி அவரது ரசிகர்களுக்கும் சரி, பொதுமக்களுக்கும் சரி பல விஷயங்கள் தெரிந்து இருக்கும் என்ற போதிலும் கூட,  அவரது அரசியல் பிரவேஷம் எப்போது?  சினிமாவில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தவர் எப்படி திடீரென ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி உடனடியாக தமிழக முதல்வராகவும் ஆனார்?  என்று தடாலடியாக யாராவது கேள்வி கேட்டால், திமுக எம் எல் ஏக்களை சொத்துக் கணக்கு காட்டச் சொல்லி பொதுமேடையில் விமர்சித்ததாலும், கட்சியின் செலவுக் கணக்கைக் கேட்டதாலும் தான் அவர் திமுகவிலிருந்து கருணாநிதியால் வெளியேற்றப்பட்டார் என்றும் அந்த உத்வேகத்தில் அவரது ரசிகர்கள் காட்டிய ஏகோபித்த அன்பிலும், வரவேற்பிலும் முகிழ்த்தது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் எனும் கட்சி என்றும் பொத்தாம் பொதுவாக யார் வேண்டுமானாலும் பதில் சொல்லி விடுவார்கள்.  ஆனால் எம்.ஜி.ஆரின் அரசியல் வரலாறு அத்தனை எளிதாகச் சொல்லி முடித்து விடக்கூடியது அல்லவே! அவர் 1952 முதலே தம்மை மிகுந்த அரசியல் ஈடுபாடு கொண்டவராகவே காட்டிக் கொண்டிருந்துள்ளார். 1952ல் பேரறிஞர் அண்ணாவின் தலைமையால் ஈர்க்கப்பட்டு திமுகவில் ...

தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்யும் அதிமுகவின் லிங்க்

படம்
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்தால் அதிமுக விதிகளின் செய்யும் மாற்றம் அதிமுக பொதுக் குழு தீர்மானம் இடம்பெறும். https://eci.gov.in/files/file/4934-all-india-anna-dravida-munnetra-kazhagam-constitution/ List of AIADMK office bearers uploaded in ECI website link below: https://eci.gov.in/files/file/15120-all-india-anna-dravida-munetra-khazagham/

இடைத்தேர்தல் தோல்வியின் போது கருணாநிதி எழுதிய கடிதம் ஒரு நினைவூட்டல்

படம்
கருணாநிதி எழுதிய கடிதம்: அமைச்சர்கள் தேர்தல் பணிக் குழுவில் இடம் பெற்றதால், அந்தந்த அமைச்சர்களின் கீழ் பணியாற்றும், அரசு அதிகாரிகளை, ஆளுங்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட வைத்தார்கள். ஏற்காடு தொகுதி வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக அரசின் இலவச உதவிப் பொருள்களான மிக்ஸிகள், கிரைண்டர்கள், மின் விசிறிகள் போன்றவை அந்தத் தொகுதிக்குள் கொண்டு சென்றதை 11/11/2013 தேதிய "தினமலர்" நாளேடே வெளியிட்டிருந்தது. ஏற்காடு தொகுதி தேசிய நெடுஞ்சாலைகளில், வாகனச் சோதனை என்ற பெயரில் பொதுமக்க ளின் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அமைச்சர்கள் செல்லும் கிராமச் சாலைகளில் சோதனையிடவே இல்லை. தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், வேட்பு மனு தாக்கல் செய்ய அதிமுக கொடி கட்டிய காரில் வந்தபோது, அமைச்சருக்குப் பாதுகாப்பாக காவல் துறையினர் தேர்தல் விதிமுறைகளை மீறி, தமிழ்நாடு அரசு ஜீப் வாகனத்தைப் பயன்படுத்தினர். அதிமுக வேட்பாளர், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது, நாற்பதுக்கும் மேற்பட்ட அதிமுக கொடி கட்டிய கார்கள் தேர்தல் விதி முறைகளை மீறி வந்தன. 13/11/2013 அன்று பகல் 12 மணியளவில் அனைத்து அமைச்ச...

ஆதரவு கொடுத்தும் கேட்கத்தான் யாருமில்லை!!!

படம்
ஈரோடு இடைத்தேர்தலும், அரசியல் தற்குறி அண்ணாமலை expose ஆனவிதமும் - ஒரு பார்வை  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அண்ணாமலை, தானே அங்கு போட்டியிட விரும்பினார்.  அதிமுக திமுகவுக்கு இணையாக பிஜேபி வளர்ந்துவிட்டது என கூசாமல் கொக்கரித்த அண்ணாமலை, 5% ஓட்டைக் கூட அங்கு வாங்கிக் காண்பிக்க முடியாது என்ற கள 'உண்மை' தெரிந்துவிட்டதால் பின்வாங்கினார் சரி அடுத்து, அதிமுகவை ஆட்டங்கட்ட அண்ணாமலை செய்த பகீரதபிரயத்தனங்கள் பல. அவற்றுள் சில... ஓடிச்சென்று வாசன் அவர்களை கிட்டதட்ட மிரட்டி, தாமரை சின்னத்தில் யுவராஜை நிறுத்துங்கள் என்றார். முடியவில்லை. பிப் 1 பிஜேபியின் நிலைப்பாட்டை அறிவிப்போம் என்றார். நிறைய பிஜேபியினர் இடைத்தேர்தலில் போட்டியிட வலியுறுத்துகின்றனர் என்றார்.  நாராயணன் திருப்பதியை விட்டு, நாங்கள் போட்டியிடக் கூட வாய்ப்பிருக்கிறது, அதிமுக காத்திருந்தால் காத்திருக்கட்டும் என்று திமிராக வேண்டுமென்றே பேச வைத்தார்.  தொகுதிக்கு 100 ஓட்டு கூட இல்லாத  இந்த ஏசி சண்முகம், பச்சமுத்து மற்றும்   ஜான்பாண்டியனை வைத்து, அதிமுகவை லாம் நாங்க மதிக்கல, பிஜேபி சொன்னா நாங்க ஒ...