இடுகைகள்

தன் மொழி தானாய் வளரும்....

மானம் கெட்ட வந்தேறிகளா!!!! நியாபகம் இருக்கட்டும் நாங்கள் இல்லையேல் இந்தியா என்ற நாடு உலக அளவில் யாருக்கும் தெரிந்திருக்காது... ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என வந்தேறி இந்திய கடற்படையினர் கூறியதாக மீனவர்கள் வாயிலாக செவியில் வந்தது... இச்செய்தி உண்மை எனும் பட்சத்தில் மிகவும் கண்டிக்கத்தக்கது... படிப்போம் தமிழை(தாய் மொழியில்) கற்றுக் கொள்வோம் அனைத்து மொழியையும் முதலில் மதிப்போம் பிறரை பிற மொழியினரை.... தன் மொழி தானாய் வளரும்.... #ADMK4ever

குழந்தைகள் தினம்

Nov 14 நேரு மாமாவின் பிறந்தநாள்... குழந்தைகள் தினம்... ஐயா! நீவிர் எங்களுக்காக சிறை சென்ற செம்மல் என படித்திருக்கின்றேன்... அதே போல் நீங்கள் இன்னும் ஓரு விஷயம் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும், ஆம் ஐயா! உங்கள் குடும்ப நபர்கள் அரசியல்வாதிகள் ஆகாமல் தடுத்திருந்தால் இன்றும் காங்கிரஸ் ஆண்டுகொண்டிருக்கும் பிஜேபி என்ற ஒரு தீய சக்தி வந்திருக்காது... #ADMK4ever

சசிகலா ஒரு சதிகலா....

இங்கு ஜாதி மதம் பற்றி பேச கூடாது என்று இருந்தேன் பேச வைத்து விட்டார்கள்... இருப்பினும் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று கூறிவிட்டு விழைகிறேன்... அஇஅதிமுகவை தனது என்று சொல்லும் சசிகலாவின் பக்கம் ஒரு சிறு கூட்டம் இருக்கிறதே அது உண்மையான அம்மாவின் விசுவாசிகள் இல்லை... அது அம்மா இருக்கும் போது பொதுநலவாதி என்று கூறிக்கொண்டிருந்த கூட்டம் இன்று எதற்காக இப்படி மாஃபியா கூட்டத்திற்கு ஜால்ரா போடுகிறது என்பது என் முதல் வரியை படித்தால் புரியும்... அம்மாவின் அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல் செய்து அதில் அம்மாவை சிக்க வைத்து நாடகம் ஆடிய கூட்டம் இன்று வியர்வையை ரத்தமாக சிந்தி உருவாக்கிய அஇஅதிமுகவுக்கு உரிமை கூறுகின்றது... அம்மாவுக்கு நாங்கள் தான் எல்லாமுமாக இருந்தோம் என்று சொல்லி கொண்டு வரவேண்டாம் இன்று உங்கள் சொத்துமதிப்பே கூறிவிடும் நீங்கள் ஏன் அம்மாவின் பின் இருந்தீர்கள் என்று.... ஜெயம் வரும் இரட்டை இலையோடு.... #ADMK4ever

லட்சுமி- குறும் படம் கருத்து...

லட்சுமி குறும் படத்தில் பாரதியார் பாடலை வைத்ததற்கு வெட்கப்பட வேண்டும்... பெண் ஆணோடு கட்டாயம் போட்டியிட வேண்டும் ஆனால் புகை பிடிப்பதிலும் மது பாணம் அருந்துவத்திலும் இல்லயடா... முட்டாள் உலக பெண்ணியவாதிகளா... Porn படங்களில் நடிப்பவர்களும் பெண் தான் ஆண் தான் அவர்களுக்கு உடல் உண்டு என்பதை உணரும் காலம் வரவேண்டும்... பெண்ணியம் பேசும் சிலர் சாதனை பெண்களை மறந்துவிட்டு இவ்வாறான விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து அழித்து வருகின்றனர்... பெண்ணியம் காக்க பாடுபட்ட பெரியார் தற்போது காகிதமாய் மட்டுமே இருப்பதே அவமானம்... ஆண்கள் பலரிடம் பாலுணர்வு வைத்து கொண்டாலும் பெண்கள் பலரிடம் பாலுணர்வு வைத்து கொண்டாலும் குற்றம் குற்றமே... ஆணுக்கும் பெண்ணுக்கும் சரியான புரிதல் இல்லாமையே கள்ள காதல் பெறுக காரணம் என்று நான் நினைக்கிறேன்... #ADMK4ever

தமிழிக அரசியல் கூத்து....

கமல் நவம்பரில் கட்சி ஆரம்பிக்கிறார்... ரஜினி டிசம்பரில் கட்சி ஆரம்பிக்கிறார்... தினகரன் இரட்டை இலை கிடைக்காது என்பதால் தனி கட்சி ஆரம்பிக்கிறார்... விஷால் தனி கட்சி ஆரம்பித்தால் வெற்றி தான் என்கிறார்... இவனுங்க என்ன நினைச்சிட்டு இருகாணுங்க... முதல்வர் ஆகிய பிறகு அல்லது முதல்வர் ஆசையில் கட்சி ஆரம்பிக்க நினைப்பவன் எப்படிடா நல்லது செய்வான்... கூத்தாடி பின்னால் அலையும் முட்டாள் ரசிகர்கள் உணரும் காலம் மலருமா????? #ADMK4ever

Why choose OPS as your choice???

Tamilnadu required a common man to become get power. Not an actor/Not a Mafia/Not from a Family Politics/Rational Politics/National Politics.... Actor-Vijayakanth(He is not a good leader & controlled by his wife and also his wife family dominating in it) Mafia-All knew about the family of sasikala also J was blackmailed by this group. i think knew the something personal in her personal life, Family Politics-Stalin is doing clean family politics, DMK is fully under the control of Karunanithi family. This is found by Anna with lot of expectation. Now sasikala & family, Ramadoss & family also joined in this list, Rational politics-Anbumani, Thiruma, Krishnaswamy, Se Ku Tamilarasan, Sarathkumar, Seeman, Muslim Parties, BJP, Karunas are doing rational politics. By using their ancient identity into modern politics. Also youngsters easily fall into it. National Politics-Congress, Communist & also BJP thinking with National mind. Ignoring the local peoples mind. Al...

OPS Vs SasikalaNatarajan

ஓரு பெண் அரசியலில் நிலைப்பது கடினம்... #சசிகலாநடஜான் இவ்வாறான வார்த்தையை பயன் படுத்தி அனுதாபத்தை தேட பார்க்கும் சசிகலா, துணைக்கு ஜெவை அழைத்தது தான் உச்சம். பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதில் மாற்று கருத்தே இல்லை ஆனால் அது எந்த வழியில் என்பதே கேள்வி. அரசியலில் வாரிசு என்பது இருக்க கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து, அது மகனாகவோ மகளாகவோ சொந்தமாகவோ நண்பனாகவோ இருந்தது மட்டுமே ஜெவுக்கு அடுத்தது சசிதான் என்பதையே எதிர்க்கின்றோம். சசி முதலில் அடிப்படை உறுப்பினர் ஆகுங்கள், படிப்படியாக முன்னேறுங்கள் அப்போது வந்து எங்களிடம் ஆதரவு கோருங்கள் பரிசீலனை செய்யலாம். குறைந்தப்பட்சம் ஒரு தேர்தலையாவது சந்தித்து விட்டு வந்திருக்கலாமே! கட்சியில் உழைத்தால் விசுவாசமாக இருந்தால் எந்த இடத்தையும் அடையலாம் என்ற எண்ணம் வரும் போதே மக்களுக்கான அரசியல் மேலோங்கும்.... #ADMK4ever  #OPS #SasikalaNatarajan #ADMK