இடுகைகள்

செப்டம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீட் தேர்வும் உண்மையும் பொய்யும் : நடுநிலையாளர்

படம்
நீட் தேர்வும், உண்மையும், பொய்யும்., 👇 யாருக்கு வேண்டுமானாலும் வாக்களித்து கொள்ளுங்கள்., அது உங்கள் உரிமை., ஆனால் பொய்யான வாக்குறுதி அளிப்பவர்களுக்கு ஒரு போதும் வாக்களிக்காதீர்கள்., நீட் தேர்வை, நீக்கவே முடியாதா என்றால் நிச்சயம் முடியும் தான், மக்களவை & மாநிலங்களவையில் நீட் ரத்து செய்வதற்கான சட்ட வரைவு கொண்டுவந்து அதை பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றி, அதை உச்ச நீதிமன்றம் & குடியரசு தலைவரின் சம்மதத்தோடு நீக்குவதற்க்கானதுதான் தற்போது இருக்கும் ஒரே வழி., தற்போது உள்ள சூழ்நிலையில் இதை செய்ய மத்திய ஆளும் கட்சியான பிஜேபியால் மட்டுமே முடியும்., நீட் வேண்டும் என்ற முடிவில் இருக்கும் பிஜேபி இதை செய்வதற்கான வாய்ப்பு மிக மிக குறைவே., மாநில கட்சியான திமுகவால் இது சாத்தியமா என்பதை மக்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்., ரெண்டாவது.,  நாளை , ஒருவேளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் கட்சி நீட்டை ரத்து செய்துவிடுமா என்றாலும் 100 க்கு 99 சதவிகிதம் வாய்ப்பு கம்மிதான், ஏனென்றால் இந்தியாவில் நீட் தேர்வு அவசியம் என சொல்லி அதை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து அதை சட்டமாக்கியத...

நேற்றைய ஓ பன்னீர்செல்வம் என்னும் சுயநலவாதியின் பேட்டி எதை உணர்த்துகிறது?

படம்
நேற்றைய ஓ பன்னீர்செல்வம் அவர்களின் பேட்டி: 1. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் அதிமுகவை வழிநடத்த தகுதியானவர் என்பதை நிரூபித்து இருக்கிறது, 2. திமுக என்னும் தீயசக்தியை, பாஜக என்னும் மதவாதசக்தியை எதிர்க்க கூடிய தலைவர் தமிழ்நாட்டில் அது எடப்பாடியார் மட்டுமே என்பதை தெளிவுபடுத்தியது. 3. திரு. O பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் இருக்கும் கூஜாக்களை ஏன் அதிமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற சந்தேகம் இருந்தவர்களுக்கு விடையாக அவர் திருவாயிலேயே உதிர்ந்து இருக்கிறது, 4. அண்ணா, அம்மா இவர்களின் புகழை கடத்தி செல்ல தகுதியான தலைமையை இயற்கை நமக்கு கொடுத்து இருக்கிறது.

என்ன நடந்தது 25 செப்டம்பர் 2023 அன்று அதிமுக தலைமை அலுவலகம் எம்.ஜி.ஆர் மாளிகையில்...

படம்
தமிழ்நாட்டில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை வைத்து எடப்பாடி தெளிவுப்படுத்திய நிலையில், அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர்கள் நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி ஆகியோரை செப். 23-ம் தேதி டெல்லிக்கு அனுப்பிவைத்தார் எடப்பாடி. அவர்களும் அண்ணாமலை குறித்து கருத்தை பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிடம் தெளிவுப்படுத்தினார்கள். ஆனால், ஜே.பி.நட்டா அதை காதிலேயே வாங்கிகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில்தான் அ.தி.மு.க தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் செப்.25-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுமென்று 24-ம் தேதி காலை அறிவிப்பு வெளியானபோதே, `பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை' என்பதை எடப்பாடி அறிவிக்கப்போகிறாரென்று தகவல் பரவியது. அதன்படி, செப்.25-ம் மதியமே அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூடத்தொடங்கினர். வழக்கத்துக்கு மாறாக கூட்டமும் அலைமோதியது. ஆங்காங்கே அண்ணாமலைக்கு எதிராகவும், பா.ஜ.க-வுக்கு எதிராக கோஷங்களை கேட்ட முடிந்தது. கூட்டத்துக்கு வரும் நிர்வாகிகளின் செல்போன்கள் மு...

திமுகவின் மூலதனமே பொய் தான், பொய் மட்டும் தான்!!!

படம்
திமுக சார்பில் தொலைகாட்சி விவாதங்களில் பேசும் வக்கீல் சரவணன் அண்ணாதுரை என்பவர் போகிற போக்கில், தமிழ்நாட்டில் இருக்கும் 69% இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது கருணாநிதி தான் என்று பதிவிட்டிருக்கிறார். அண்ணாதிமுகவின் அடிமட்ட தொண்டனான நான், இதை பார்த்ததும் அதிர்ச்சியடையவில்லை.  பித்தலாட்டம் செய்வதற்கென்றே பிறப்பெடுத்த, பித்தலாட்டத்தின் பிதாமகன், திரு கருணாநிதி அவர்களின் வழியில் வந்தவர்கள், பித்தலாட்டம் செய்யாமலிருந்தால் தான், அதிர்ச்சியடைய வேண்டும் என்ற அடிப்படைத் தத்துவத்தை அறிந்தவன் நான். சரி, விஷயத்திற்கு வருவோம்.  69% இட ஒதுக்கீடு கொண்டுவந்தது யார்..? அதன் வரலாறு தான் என்ன..? தரவுகளை நான் தருகிறேன். பிறகு நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள். 1950 அரசியலமைப்புச் சட்டம் 41% இட ஒதுக்கீட்டைத் தந்தது.  பிற்படுத்தப்பட்டோருக்கு OBC - 25% பட்டியல் இனத்தவருக்கு SC - 16% புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் பிரச்சாரம் செய்யப்பட்டு உருவான அன்றைய திமுக அரசால், 1971-76 திமுக ஆட்சிக் காலத்தில் 8% உயர்த்தப்பட்டு, 41% என்பது 49% ஆக மாறுகிறது இட ஒதுக்கீடு.  அதாவுது,  OBC -...

உண்மையான சனாதான தர்மத்தின் இடைசொருகளை ஆக்கப்பூர்வமாக எதிர்க்கும் கட்சி அதிமுக மட்டுமே!!!!

படம்
🌟 சமூகநீதி / இடஒதுக்கீடு 1) 50% இடஒதுக்கீட்டை தந்தது அதிமுக...! 2) 69% இடஒதுக்கீட்டோடு சட்டப்பாதுகாப்பும் தந்தது அதிமுக..! 3) மணியக்காரர் முறை ஒழிக்கப்பட்டு,VAO பதவி உருவாக்கம்... 4) உள்ளாட்சியில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு... 5) தெருக்களில் இருந்த சாதி பெயர் நீக்க நடவடிக்கை... 6) அரசுபள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு...  🌟 மகளிர் நல மேம்பாடு 1) குழந்தைகளுக்கு தாயின் முதலெழுத்தையே Initial ஆக போட உரிமை வழங்கியது. 2).மகளிர் காவல் நிலையத்தை அமைத்து கொடுத்தது. 3) பெண்கள் சுயதொழில் தொடங்க வழிவகை செய்தது. 4) மகப்பேறு விடுப்பை 9 மாதமாக அதிகரித்தது. 5) பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டத்தை தொடங்கியது... 6) பெண்களுக்கு தாலிக்கு தங்கம் கொடுத்தது...! 7) தாய்மார்களுக்கு பாலூட்டும் அறையை ஏற்படுத்திக் கொடுத்தது... 8) ஆசியாவிலேயே முதல் பெண் ஓட்டுநரை அறிமுகப்படுத்தியது...! 9) +2 படித்திருந்தால் பெண்களுக்கு 25,000 ரூ...உயர்கல்வி படித்தால் பெண்களுக்கு 50,000 ரூ என்று திருமண உதவித்தொகை வழங்கியது அதிமுக அரசு...! 10) பெண் சிசுக்களை காக்க த...

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் அரசியல் வரலாறு

படம்
எம்.ஜி.ஆரைப் பற்றி அவரது ரசிகர்களுக்கும் சரி, பொதுமக்களுக்கும் சரி பல விஷயங்கள் தெரிந்து இருக்கும் என்ற போதிலும் கூட,  அவரது அரசியல் பிரவேஷம் எப்போது?  சினிமாவில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தவர் எப்படி திடீரென ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி உடனடியாக தமிழக முதல்வராகவும் ஆனார்?  என்று தடாலடியாக யாராவது கேள்வி கேட்டால், திமுக எம் எல் ஏக்களை சொத்துக் கணக்கு காட்டச் சொல்லி பொதுமேடையில் விமர்சித்ததாலும், கட்சியின் செலவுக் கணக்கைக் கேட்டதாலும் தான் அவர் திமுகவிலிருந்து கருணாநிதியால் வெளியேற்றப்பட்டார் என்றும் அந்த உத்வேகத்தில் அவரது ரசிகர்கள் காட்டிய ஏகோபித்த அன்பிலும், வரவேற்பிலும் முகிழ்த்தது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் எனும் கட்சி என்றும் பொத்தாம் பொதுவாக யார் வேண்டுமானாலும் பதில் சொல்லி விடுவார்கள்.  ஆனால் எம்.ஜி.ஆரின் அரசியல் வரலாறு அத்தனை எளிதாகச் சொல்லி முடித்து விடக்கூடியது அல்லவே! அவர் 1952 முதலே தம்மை மிகுந்த அரசியல் ஈடுபாடு கொண்டவராகவே காட்டிக் கொண்டிருந்துள்ளார். 1952ல் பேரறிஞர் அண்ணாவின் தலைமையால் ஈர்க்கப்பட்டு திமுகவில் ...