இடுகைகள்

Development projects should be allowed

மனப்பாட படிப்பு படித்து அறிவு என்ற திரணற்று போன சிலரின் சுய லாபத்திற்காக பயன்படுத்தப்படும் இளைஞர்களே.... வளர்ச்சி என்ற சொல்லுக்கு பின் சாலை என்ற ஒரு பெயர் வரும்... புதிய சாலைகள் வரவில்லை என்றால் அந்த இடம் பின்தங்கிய இருக்கும்... குறையில்லா நிதிநிலை அறிக்கையும் பாதிப்பில்லா திட்டமும் சாத்தியமில்லை... ஒன்று மட்டும் நினைவு கூறுங்கள் நீங்கள் இருப்பது ஜனநாயக நாட்டில், பாசிச நாட்டிலோ கம்யூனிச நாட்டிலோ இல்லை... போராட முழு உரிமை உண்டு ஆனால் அதை தவறான வழியில் பயன்படுத்தி கொள்ளும் அரசியல் கட்சிகளுக்கு தக்க பதில் தரவேண்டிய தருணம் இது... உரிய இழப்பீடு கேட்டு போராடினால் நியாயம் இருக்கிறது ஆனால் தன் நிலத்தின் வழி செல்கின்றது என்பதற்க்காக மட்டும் எதிர்க்க வேண்டாம்... சீமான் போன்றோர் இத்திட்டத்தை எதிர்க்கும் காரணம் அரசியல் தவிர வேறேதுமில்லை... மாவட்ட ஆட்சியர் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது... #ADMK4ever

ஊடகம் ஒரு TRP channel ஆகிவிட்டது...

எச்சைகள் தன் சுய அரசியல் லாபத்திற்காக 8 வழி சாலை திட்டத்தை எதிர்க்கிறார்கள்... ஜெ என்றும் அஇஅதிமுகவில் இருக்கிறார் #OPS #EPS... தகுந்த முறையில் மக்களுக்கு உரிய மாற்று இடம் வழங்கி இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.... சாலை ஒரு நாட்டின் வளர்ச்சி... மக்களுக்கு எதை எதிர்க்க வேண்டும் என்ற புரிதலை ஊடகங்கள் சரிவர செய்ய தருவருதே இப்படிப்பட்ட புரிதலற்ற வாக்குவாதங்கள் வர காரணம். TRPக்கு செய்தி தான் அதிகமே தவிர மக்களுக்காக இல்லை என்று ஆகிவிட்டது. இதை பற்றி நடவடிக்கை எடுத்தால் சந்திக்க திராணியற்று ஜனநாயக படுகொலை என்பார்கள். ஒருவர் கூறுகிறார் #EPS போய் வரவே இந்த திட்டம் என்று... இதை கேட்டால் ஒரு கும்பல் வந்து இவருக்கு ஆதரவாக கம்பு நீட்டும்... #ADMK4ever

Eco friendly State Eco friendly CM of Tamilnadu

My college conversion was with English Sir Karthikeyan (I think) during English lab, He: What is ur ambition? Me: I want to be a Politician, He: What will you do first if u will become  CM of Tn? Me: I will ban use & manufacturing of Plastics and i will introduce alternative with Indian made products and also decomposable materials. He: (Appauled), Now CM of Tn implemented this.... Thanks to TN govt to do this bold move & also i request Mr. EPS to do this with mercy & give way to alternative business. I think, EPS govt doing Eco friendly. They are Closed Sterlite permanantly (dont bla bla about protest), Methane, Hydro carbon projects are withdrawned officialy from Neduvasal, Introduced Coconut drink called "Pathani in Tamil" which will boost the farmers to earn, Now banned Plastics from Tn. Believe this govt & request your demands in procedural way. This govt will definitely do for us. Thanks, #ADMK4ever

NEET வேண்டுமா? வேண்டாமா? என்பதை விட கல்வியில் மேம்பாடு வேண்டும்!

தற்கொலை செய்து கொள்வது இந்தியாவில் சட்டப்படி தண்டனைக்குரியது... ஒரு பெண் 98+% மதிப்பெண் வாங்கும் ஒருவர் தற்கொலைக்கு செல்கிறாள் என்றால் அதற்கு இந்த சமுதாயம் அவளுக்கு கற்றுக்கொடுத்தது என்ன? 98+% மதிப்பெண் பெற்ற பெண்ணால் 6% மதிப்பெண் மட்டுமே பெற முடிகிறது என்றால் நாம் குறை கூற வேண்டியது NEET அல்ல நாம் படிக்கும் முறையை, வெட்கத்தை விட்டு சொல்கிறேன் Ohms law என்றால் என்ன என்பதை BE படிக்கும் போது தான் தெரிந்துகொண்டேன், ஆனால் நான் +2 வில் பெற்ற மதிப்பெண் 85+%. இது தான் கள நிலவரம். இதில் நாம் கற்கும் படிப்பு முறையை மாற்றி அமைக்க வேண்டிய தருணம் இது. மதிப்பெண் தான் வாழ்க்கை எனும் கூற்றை உடைத்து, அவர்கள் என்ன புரிந்து கொண்டார்கள் என்பதை பரிசோதிக்க வேண்டும். இந்த NEET போன்று மத்திய அரசு 1000 போட்டி தேர்வுகள் கொண்டு நம்மை ஒடுக்க வந்தாலும் எதிர் கொள்ளும் திராணி வேண்டும் என சொல்லுவோம். #ADMK4ever

Election 2019 Tamilnadu

என் பார்வையில்.... வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3-5% வாக்கு வாங்கும் என தோன்றுகின்றது. இருப்பினும் தேர்தல் நேரத்தில் மாற்றம் வர வாய்ப்புள்ளது. எப்படி இருந்தாலும் இது அவர்களுக்கு ஒரு நல்ல முன்னேற்றம் தான். தேர்தல் 2019ல் நாடாளுமன்ற, சட்டமன்ற அதை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல்கள் நடக்க வாய்ப்புள்ளது. தற்போது நடக்கும் ஆட்சி 2019 வரை நீடிக்கும் என்றே கருதுகிறேன். ஆனால் இந்த ஆட்சி மீண்டும் வருமா என்பதை இனி வரும் காலங்களில் இவர்களின் செயல்பாடு மட்டுமே நடத்த கசப்புகளை மறக்க செய்தால் பார்க்கலாம். ஊடகம் எந்த பக்கம் இருக்கும் என்பதை பொருத்தும் 5-10 % வெற்றி அமையும் என்பதிலும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.  இதுவரை திமுக கூட்டணி ஆட்சி அமைக்கவே அதிகம் வாய்ப்புள்ளதாக கருதுகிறேன். மேலும் இரண்டாம் இடம் எப்போதும் போல் அஇஅதிமுக வரவே வாய்ப்புள்ளது. மூன்றாவது இடத்திற்கு கடும் போட்டி இருக்கும் என்றே தோன்றுகிறது. டெல்டா பகுதியில் நல்ல பலம் உண்டு என்று சொல்லும் அளவுக்கு அமமுக வர வாய்ப்புள்ளது, ஆனால் வெற்றி பெருவார்களா என்பதை காத்திருந்தே பார்க்க முடியும். நடிகர்களின் புது கட்சிகளும் எங்கு இ...

Stalin real joker of Tamilnadu Politics

ஸ்டாலின் மற்றும் திமுக தோழர்கள் இன்று கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றம் வருகின்றனர்... எதற்காக இருக்கும், 1. Sterlite ஆலையை மூடிவிட்டதால் அதில் இருந்து கீதா ஜீவன் மூலமாக வந்த வருமானம் போய்விட்டது என்றா, 2. இதை வைத்து ஒரு 10 நாள் வெளிநடப்பு செய்து சட்டமன்றம் முன்பு சாலை மறியல் செய்யலாம் என்ற எண்ணத்தில் மண் விழுந்ததற்கா, எது உண்மையான போராட்டம் என்பதை மக்கள் உணர்ந்துவிட்டனர். எதிர் கட்சி தலைவர்கள் நமக்காக போராடி வாங்கிதருவார்கள் என்ற எண்ணம் போனதே இந்த தனெழுச்சி போராட்டங்கள் என்பதை இந்த சமூகம் கடந்து ஆளும் கட்சியை மட்டும் குறை கூறும் நடுநிலை என்ற போர்வைக்குள் ஒழிந்துள்ளனர். எப்படியாவது பிஜேபி யுடன் இந்த அரசை சேர்த்து பொது தளங்களில் பேசுவதும் ஒரு வாடிக்கை ஆகிவிட்டது. #ADMK4ever

சினிமாவின் அவலம்.... காட்சி பொருளாகும் நடிகைகள்....

(முன்னணி) நடிகர்களே! இயக்குனர்களே! திரை உலகில் பெண்களுக்கு (நடிகை) உரிய பாதுகாப்பு இல்லை என்றும், அவர்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்த படுகிறார்கள் என்றும், வாய்ப்புக்காக adjust செய்ய வேண்டியுள்ளது என்றும்.... இதெல்லாம் நான் சொல்லலப்பா... ஒரு சில தைரியம் கொண்ட பெண்கள் சினிமாத்துறையால் துன்புற்றவர்கள் சொன்னது... இது தங்களுக்கு தெரிந்ததே... ஏன் இதை எல்லாம் உங்களால் தடுக்க முடியவில்லை... குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதா?? தயாரிப்பாளர்கள் இயக்குனர்களை பகைத்து கொண்டால் வாய்ப்பு போய் விடும் என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிடீர்களா? இப்போது எந்த முகத்தோடு பொது அரசியல் பேச சமூகவலைத்தளம் வந்துவிடீர்கள்?? தன் முதுகில் உள்ள அழுக்கை முதலில் துடைக்க முடியவில்லை வந்துவிட்டார்கள் வியாக்கியானம் பேச... பெண் தமிழ் சினிமா துறையில் இன்னும் விளம்பர பொருளாகவே பார்க்கப்படும் அவலம் தொடற்கதையே... என்னையும் என்னை போன்றோரையும் அப்படியே பழக்கிய ஒரு சமூக துரோகிகள் நீங்கள் என்பதை மனதில் வைத்து கொண்டு இதை எல்லாம் சரி செய்து விட்டு பொது அரசியல் பேச வாருங்கள்... சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறோம் உங்...