Director Bharathiraja supports Jaya
சென்னை: ராஜீவ் காந்தி கொலைக்கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜெயலலிதா வுக்கு ஒட்டு மொத்த தமிழர்களும் உறுதுணையாக நிற்பார்கள்’ என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்பட 7 பேரின் விடுதலை நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரையுலகம் சார்பில், சென்னை வடபழனியில் உள்ள ஆர் .கே.வி. ஸ்டுடியோவில் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய பாரதிராஜா, "உலக நாடுகள் அனைத்தும் தூக்குத் தண்டனையை எதிர்க்கும் சூழ்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி சதாசிவம் மிக சரியான தீர்ப்பை சொல்லி இருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வது மாநில அரசின் முடிவு என்று அவர் தீர்ப்பு கூறியதும் முதல்வர் ஜெயலலிதா தாய்மை உணர்வுடன் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேர் உள்பட சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இதற்காக உலக தமிழர்கள் அத்தனைபேரும், கண்ணீரால் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக...