சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?
சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?
லட்சுமணன், லட்சுமி, தராசு சியாம் போன்றோர் திமுகவின் கைப்பாவையாக இருந்து அதிமுகவை அழிக்க திட்டமிட்டு ஊடகங்களில் உருவாக்கிய பிம்பம் தான் "சசிகலா".
ஆனால் உண்மையில் சசிகலாவை பெரிதும் யாரும் ரசிக்கவில்லை, அமமுக தொண்டர்கள் மற்றும் இவரின் சமுதாயத்தினர் சிலர் நீங்கலாக. இவரின் சமுதாயத்தினர் இவர் மீது ஒரு மரியாதை கொண்டுள்ளனர் என்பது உண்மையே. ஆனால் அதை அவர் காப்பாற்றும் அளவுக்கு நடந்து கொள்கிறாரா என்றால், இல்லை என்பதே உண்மை.
அரசியல் என்பது செஸ் விளையாட்டை போன்றது, ஒரு move தவறாக அல்லது அவசரப்பட்டு வைத்து விட்டால் காலியாகி போவோம். சசிகலா ஒரு move இல்லை பல move களை தவறாக வைத்து விட்டார். முதலில் இவர் முதல்வர் ஆக ஆசைப்பட்டது முதல், நம் ஓ பன்னீர்செல்வம் அவர்களை முதல்வர் பதவியை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தது, நம் எடப்பாடி கே பழனிசாமி அவர்களை முதல்வர் ஆக்கியது, அமமுக என்னும் கட்சியை விமர்சனம் செய்யாதது வரை அனைத்துமே இவர் செய்த தவறான move தான். கடைசியாக தேர்தலுக்கு முன் ஓய்வு அறிவிப்பு தொடர்ந்து தேர்தலுக்கு பின் அரசியல் பிரவேசம் என்பது எல்லாமே இவரின் தவறான முடிவுகள் தான். நேரடி அரசியல் செய்ய தெரியவில்லை என்பதையே இவைகள் காட்டுகின்றது. அதிகார அரசியல் செய்த இவரால் நேரடி அரசியல் செய்ய தெரியாமல் போனது துரதிஷ்டம் தான் இவருக்கு. இவர் தன் குடும்பத்தை நம்பினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்களை நம்பி கட்சியை ஓ பன்னீர்செல்வம் அவர்களை வைத்து கட்சியை மீட்டு, ஆட்சியை வைத்து அதிமுக வை கடைசி 2 ஆண்டுகளில் மக்களின் இதயங்களை வென்றார், தொடர்ந்து களப்பணி செய்கிறார்.
நிதானம் அமைதி பொறுமை இதை தான் எடப்பாடி பழனிச்சாமி மிகப் பெரிய ஆயுதமாக பயன்படுத்துகிறார்.
சரி, சசிகலா இப்போது என்ன செய்ய வேண்டும் என்றால்.
ஒன்றே ஒன்று தான். ஓய்வு எடுப்பது, அமமுகவை களைக்க செய்வது. அதிமுகவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இவர்களை புகழ்வது என தொடர்ந்து ஈடுபடும் பட்சத்தில் இவர் மீது மக்களின் கடைக்கண் பட்டு மீண்டும் கட்சியில் இணைக்க வாய்ப்புள்ளது. ஆனால் இவர் தான் இருந்தால் பாஸாக தான் இருப்பேன் என்று இருந்தால், இப்படியே இருக்க வேண்டியது தான். இல்லை, அமமுகவின் தலைவர் ஆகலாம். ஆனால் அதுவும் டம்மி தலைவராக தான் TTV தினகரன் இவரை வைத்திருப்பார்.
கருத்துகள்
கருத்துரையிடுக