ADMK4ever : Verdict on 18 MLA disqualification case

திரு 18 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களே...
தங்களுக்கு ஒரு கேள்வி, ஆயிரம் இருந்தாலும் அம்மா கொடுத்த இந்த கொடையை நீங்கள் இப்படி பால் செய்து விடீர்களே அதுவும் ஒரு தனி மனிதனின் நலனுக்காக... மக்கள் இருக்கின்றனர் என்று நீங்கள் நம்புவது RK நகர் தேர்தல் வெற்றியை வைத்தா?
அது ஒரு போலியான வெற்றி என்று அதன் தீர்ப்பை பார்த்துமா உங்களுக்கு புரியவில்லை... TTV  என்னும் தனி மனிதன் விலை கொடுத்து வாங்கிய வெற்றி அது...
மேலும் மன்னார்குடி குடும்பம் அம்மாவையே கொன்றிருக்கலாம் என்ற சந்தேகம் (இது சந்தேகம் மட்டுமே) வரும் அளவுக்கு ஒருவர் அம்மாவிடம் இருந்திருக்கிறார் என்றால் நாம் அவர்களுக்கு பின் செல்வது மிக பெரிய துரோகம் இல்லையோ?
இந்த ஆட்சியை யார் நடத்துகின்றனர் அம்மாவின் அமைச்சரவையில் இருப்பவர்கள் தானே? ஏன் உங்கள் சுயநலம் இங்கு பெரிதாய் வந்தது?
ஒரு தனி மனிதன் தான் நம் அம்மா கட்டி காப்பாற்றிய இயக்கமா அதுவும் ஒரு மாபியா தான் உங்கள் தலைவனா?
நீதி ஒரு நாள் வெல்லும் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் இன்றைய தீர்ப்பு அமைந்திருப்பதை நினைத்து சந்தோசப்படுவதா இல்லை தனி மனிதனுக்காக உங்கள் பதவி பறிபோய் விட்டதை நினைத்து வருத்தப்படுவதா என்று தெரியவில்லை....
எது போலி என்று கூடவா உங்கள் கண்களுக்கு தெரியவில்லை?

நீங்கள் அனைவரும் ஏதோ ஒரு காழ்புணர்ச்சியாலேயே அங்கு இருந்தீர்கள் என்பது நாடறியும்... செந்தில் பாலாஜிக்கு பதவி ஆசை தங்க தமிழ்செல்வனுக்கோ ஓபிஎஸ் மீது பகை.. மற்றவர்கள் ஜாதிய பற்று மற்றும் பணத்தின் மீது கொண்ட காதல்... விசுவாசம் காட்டவேண்டிய இடம் உங்களை முதுகுக்கு பின் இருந்து ஆதரித்தவன் என்ற போர்வையில் இருந்த சசிகலாவின் குடும்பத்துக்கு இல்லை நீங்கள் எந்த இயக்கம் உங்களை அடையாள படுத்தியதோ அதற்க்கு... ஏதோ உங்களுக்கு அவர்கள் சுயநலமின்றி உங்களுக்கு செய்தார்கள் என்று சொல்ல ஏதாவது ஒரு சின்ன எடுத்துக்காட்டு யாரவது கொடுக்க முடியுமா?

தாய் கழகம் வாருங்கள் தவறை உணர்ந்து இல்லையேல் நீங்கள் வரலாற்றில் முகவரி அற்ற அரசியல் கோமாளிகள் ஆக்கப்படுவீர்கள்...

#admk4ever

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜயின் அரசியல் பிடித்து விஜய்க்கு வாக்களிக்க நீங்கள் முடிவு செய்திருந்தால் நான் இந்த கேள்வியை உங்களிடம் கேட்க மாட்டேன், ஆனால் நீங்கள் அப்படியில்லையே!

Ministers of MGR's Assembly: Rare Pics